ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

by Staff / 10-08-2023 12:43:38pm
ஒரே குடும்பத்தில் மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

நாகை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது. நாகை மாவட்டம் காமேஷ்வரம் அருகே வீட்டில் பழுதான மின் விளக்கை சரி செய்யும் போது மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோகுலின் தந்தை புற்றுநோய் பாதிப்பில் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து, மகன், பேரன் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சியில் சிறுவனின் தாத்தாவும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via