பொன்முடி மீதான வழக்கு - மீண்டும் விசாரணை

by Staff / 10-08-2023 01:33:10pm
பொன்முடி மீதான வழக்கு - மீண்டும் விசாரணை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் போதிய ஆதாரம் இல்லை என்று அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வைந்து மறு விசாரணை செய்யவுள்ளது. இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வு முன்பு இன்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. எந்த அடிப்படையில் வேலூர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்தது என்றும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Tags :

Share via