பயிற்சிக்காக தமிழ்நாடு வந்த மணிப்பூர் வீரர்கள்

by Staff / 14-08-2023 02:50:33pm
பயிற்சிக்காக தமிழ்நாடு வந்த மணிப்பூர் வீரர்கள்

மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மேதி இன மக்கள், தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வந்த நிலையில், மாநிலமே முடங்கி கிடந்தது. இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் பயிற்சிக்காக தமிழ்நாடு வந்தனர். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரத்தால் வீரர்கள் அங்கு பயிற்சி பெற முடியாத நிலை உள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via