காளான் சாப்பிட்ட மூன்று பேர் பலி

by Staff / 12-08-2023 01:17:28pm
காளான் சாப்பிட்ட மூன்று பேர் பலி

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லியோங்கதா என்ற பகுதியில் கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வீட்டில் மதிய உணவாக காளான் சாப்பிட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்களில் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நான்காவது நபரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதே வீட்டில் இருக்கும் மற்றொரு பெண் நான்கு பேருக்கும் உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார். அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விஷக் காளான் என போலீசார் கண்டுபிடித்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via