எல்லை பாதுகாப்புபடை வீரர் வைரஸ் காய்ச்சலால் டெல்லியில் உயிரிழப்பு.

by Editor / 16-08-2023 03:33:59pm
எல்லை பாதுகாப்புபடை வீரர் வைரஸ் காய்ச்சலால் டெல்லியில் உயிரிழப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மணலி பகுதியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜெகதீஷ் (35) இவர் டெல்லியில் கமாண்டோ பிரிவில் பயிற்சி பெற்று வந்த ஜெகதீஷ் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.21-துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.இவருக்கு திருமணமாகி  கர்பிணி மனைவி சந்தியா 4-வயது மகன் ஆதித்யா உள்ள நிலையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தசம்பவம்  அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : எல்லை பாதுகாப்புபடை வீரர் உயிரிழப்பு.

Share via