நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் கொலை ஐந்து பேர் கைது

by Admin / 20-08-2023 09:16:37am
 நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் கொலை ஐந்து பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தேவகோட்டை தாலுகா இருவாணி வயல்  பகுதியில் உள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் வினோதினி வயது (19 )இன்சாகிராம் மூலம்   கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்த  மனோரஞ்சித்( 22)என்பருவுடன் பழகி இருவரும் உயிருக்கு உயிரா காதலித்தனர் காதலன்  நினைவாக வலது கையில் எம்.வி. என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் 'ஹார்டின்' படமும் பச்சைகுத்தி  காதலை  வெளிப்படுத்தி உள்ளார் இந்நிலையில் வலசை பகுதியில் நடைபெறும் திருவிழாவிற்கும் தேவகோட்டையில் இருந்து வினோதினி வருவது வழக்கம் எனக் கூறப்படுகிறது

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோதினிக்கு பெற்றோர்கள் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைத்தனர் இதனை தெரிந்து கொண்ட மனோரஞ்சித் காதலியை மறக்க முடியாமல் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் உடனே குடும்பத்தினரும் நண்பர்களும் மனோரஞ்சித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி உள்ளனர்

அதன் பின்னர் தொடர்ந்து  வினோதினியை மனோரஞ்சித் காதலித்து வந்துள்ளார் ஒரு கட்டத்தில் வினோதினி தான் திருமணம் முடித்த கணவரை விட்டு விட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காதலன் மனோரஞ்சித்தை தேடி கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு வந்துள்ளார்

அதன் பின்னர் ஐந்து நாட்களாக வினோதினி காதலன் மனோரஞ்சித்துடன் வலசை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார் திடீரென இருவருக்கும் மத்தியில் காதல் மோதலாக மாறி உள்ளது இதனால் தன்னை விட்டு விட்டு வேறு ஒருவனை திருமணம் முடித்ததையும் இன்னும் பல ஆண்கள் உடன் இன்சாகிராமில் பழகியதையும் கண்டுபிடித்த மனோரஞ்சித்(23) நண்பர்களான வலசை காலனி பகுதியைச் சேர்ந்த மகா பிரபு(22), பரத்(21), கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன்(20) மற்றும் , 17 வயசு சிறுவன் ஆகிய 5 நண்பர்களின் உதவியுடன் காதலி வினோதினியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர்

அதன் பின்னர் சாக்கு முட்டையில் கட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றில் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் ஊரில் நடமாடி கொண்டிருந்தனர் கிணற்றிலிருந்து வினோதினி உடல் மிதக்கவும் போலீசார் வினோதினி உடலை கைப்பற்றியதை தெரிந்து  மனோரஞ்சித், மணிகண்டன், மகா பிரபு ஆகியோர் கோயம்புத்தூருக்கு சென்று  தலைமறைவானார்கள்.

இந்த கொலை சம்பந்தமாக தனிப்படை போலீசார்  கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் காணாமல் போன இளம் பெண்கள் 1125 இளம் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி எந்தத் தடயங்களும் கிடைக்காமல் சேந்தமரம் சாலை கண்மணிபுரம் மற்றும் வலசைப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராகளை ஆய்வு செய்ததில் விலை உயர்ந்த புதிய பைக்கில்   வினோதினியை  வலசை கிராமத்திற்கு மனோ ரஞ்சித் அழைத்து வந்தது தெரிய வந்தது.

மேலும் திடீரென வலசை கிராமத்தில் இருந்து மனோரஞ்சித் உட்பட மூன்று பேர்   கோயம்புத்தூருக்கு சென்றது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர் அதன் பின்னர் தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜா, வேல் பாண்டியன், கருப்பசாமி ஆகியோர் கோயம்புத்தூர் சென்று பதுங்கி இருந்த  மூன்று பேரையும் வலசை பகுதியில் இருந்த பரத் மற்றும் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் உட்பட ஐந்து பேரையும் கைது செய்துவழக்கு பதிவு செய்து நான்கு பேரை பாளையங்கோட்டை  சிறையிலும்  17 வயசு சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர் .இச் சம்பவம் வலசை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

Tags :

Share via