‘நீட்’ தேர்வு 3ஆம் இடத்தில் தமிழ்நாடு.
இந்தியாவில் மருத்துவ படிப்பிற்க்காக நடத்தப்படும் ‘நீட்’ தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாநில பாடத்திட்ட மாணவர்களில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட நீ்ட் தேர்வை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களாலேயே எழுத முடியும் என கூறப்பட்டு வரும் நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்று தேர்வுக்கு விண்ணப்பித்தோர் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, மகராஷ்டிரா மாநிலம் 2.57 லட்சம் மாணவர்களுடன் முதல் இடத்திலும், கர்நாடகா 2வது இடத்திலும், 1.13 லட்சம் மாணவர்களுடன் தமிழ்நாடு 3ஆம் இடத்திலும் உள்ளது.
Tags : ‘நீட்’ தேர்வு 3ஆம் இடத்தில் தமிழ்நாடு