.42 கோடியில் புதிய மைய கட்டிடங்கள் பணி நிறைவு

by Editor / 06-08-2025 04:53:12pm
.42 கோடியில் புதிய மைய கட்டிடங்கள் பணி நிறைவு

சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ. 42 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்​வர் விரை​வில் திறந்து வைக்​க​வுள்​ளார் என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா. சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ. 40.5 கோடி​யில் தீவிர சிகிச்​சைப் பிரிவு கட்​டிடத்​துக்கு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா. சுப்​பிரமணி​யன், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி. கே. சேகர்​பாபு ஆகியோர் அடிக்​கல் நாட்​டினர். தொடர்ந்​து, ரூ. 42 கோடி​யில் கட்​டப்​பட்டு விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரவுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்​புயர்வு மையம் கட்டு​மான பணி​யினை ஆய்வு செய்​தனர். மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

 

Tags :

Share via