20 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

by Staff / 21-08-2023 03:33:14pm
20 ஆடுகளை கடித்து கொன்ற தெரு நாய்கள்

திருப்பூர் உடுமலை பகுதி அருகே பெரியசாமி என்பவர் தன் தோட்டத்தில் பட்டி வைத்து ஆடு மாடுகள் வளர்ந்து வருகிறார். ஆகஸ்ட் 21 ஆம் தேதி திங்கட்கிழமை காலை தோட்டத்திற்கு பெரியசாமி வந்து பார்த்தபோது 20 ஆடுகளுடன் ஒரு கன்றுக் குட்டியும் குடல் வெளியே வந்து உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்த கால்நடை அதிகாரிகள் வந்து தடயங்களை வைத்து ஆய்வு நடத்தினர். பின்னர் தெரு நாய்கள் கூட்டம் அங்கு வந்து ஆடுகளை வேட்டையாடி கொன்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via