திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் மெகா திட்டப்பணிகள்

by Staff / 28-09-2022 03:38:58pm
திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் மெகா திட்டப்பணிகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 300 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக மெகா மேம்பாட்டு திட்டப்பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்து தற்போது 12 ஆண்டுகள் கடந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி பக்தர்களும் கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் சாமி தரிசனத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மெகா திட்டப்பணிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via