ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றமா? அமைச்சர் விளக்கம்

கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது. 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை நான் கூறிவிட்டேன். மருத்துவத் தேவை அதிகரித்துவரும் நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்று தெரிவித்தார்.
Tags :