துப்பாக்கி முனையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

by Staff / 25-08-2023 05:14:06pm
துப்பாக்கி முனையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்டியா கிராமத்தில் இருக்கும் எஸ்பிஐ சேவை மையத்தில் மூன்று கொள்ளையர்கள் எஸ்பிஐ வங்கியை கொள்ளை அடித்து நாசம் செய்தனர். முகமூடி அணிந்திருந்த சில மர்ம நபர்கள் வங்கி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.1.50 லட்சம் பணத்தை பறித்தனர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடைபெற்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல் கிடைத்ததும் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via