திருப்பதி மலைப்பாதையில் 4 வது சிறுத்தை சிக்கியது.

by Editor / 28-08-2023 09:07:39am
திருப்பதி மலைப்பாதையில் 4 வது சிறுத்தை சிக்கியது.

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4 வது சிறுத்தை சிக்கியது. திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பாதையாத்திரையாக அலிபிரி மலைப்பாதையில் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், திருப்பதி மலைப்பாதையில் பாத யாத்திரை செல்பவர்களை தாக்கி வந்த சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டு இருந்த கூண்டில் இன்று 4-வது சிறுத்தை சிக்கியுள்ளது. ஏற்கனவே 3 சிறுத்தைகள் சிக்கிய நிலையில், இன்று அதிகாலை மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. இன்று அதிகாலை பிடிபட்ட சிறுத்தையை உயிரியியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

Tags : திருப்பதியில் 4 வது சிறுத்தை சிக்கியது!

Share via