இலங்கை சிறையில் இருந்த 10 மீனவர்கள் சென்னை வந்தனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர்.
தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அவர்களை நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags : இலங்கை சிறையில் இருந்த 10 மீனவர்கள் சென்னை வந்தனர்.