நீரில் மூழ்கி தொழிலதிபர் பலி...

by Staff / 29-08-2023 03:00:03pm
நீரில் மூழ்கி தொழிலதிபர் பலி...

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குழிபிறை காந்திவீதியை சேர்ந்தவர் ராஜன்(69). தொழிலதிபரான இவர் நேற்று முன்தினம் மாலை புது ஊரணிக்கு குளிக்க சென்றார். அப்போது கால் தடுமாறி நீரில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via