பல்லடம் படுகொலை - ஈபிஎஸ் கண்டனம்

by Staff / 04-09-2023 11:52:44am
 பல்லடம் படுகொலை - ஈபிஎஸ் கண்டனம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் மர்ம கும்ப கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும், போதை பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று திமுக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via