செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

by Staff / 04-09-2023 12:59:59pm
செந்தில் பாலாஜியின்  ஜாமின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளாகி அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டுள்ளார். மேலும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via