சீமானுடைய சமூக வலைத்தள கணக்கு முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது-முதலமைச்சர் மு க ஸ்டாலின்
நாம் தமிழர் கட்சியின் உடைய ஒருங்கிணைப்பாளர் சீமானுடைய சமூக வலைத்தளம் கணக்கையும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சமூகவலைத்தள கணக்கையும் முடக்கியது குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தம் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதில்,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்...
Tags :