ரயிலில் புகை - பயணிகள் அதிர்ச்சி

by Staff / 11-09-2023 04:22:27pm
ரயிலில் புகை - பயணிகள் அதிர்ச்சி

ஹைதராபாத்தில் இருந்து ஹவுரா சென்ற ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெல்கொண்டா என்ற இடத்தில் ரயில் வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி அவசரமாக ரயிலை விட்டு இறங்கினர். இதனையடுத்து ரயிலின் லோகோ பைலட்கள் மற்றும் காவலர்கள் வந்து பிரச்னை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரயில் சக்கர பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது

 

Tags :

Share via