அக். 3, 4-ல் முதல்வர் தலைமையில் ஆட்சியர், காவலர்கள் மாநாடு

by Staff / 14-09-2023 12:40:26pm
அக். 3, 4-ல் முதல்வர் தலைமையில் ஆட்சியர், காவலர்கள் மாநாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் அக். 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அக். 3, 4-ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்டஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். நாள் நடைபெறும் இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொள்வார். கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகள், திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

Tags :

Share via