கணவனை கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்த மனைவி சரண்
காஞ்சிபுரம் மளிகை செட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நவ்ஷாத். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்னதாக ரேவதி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்ய ரேவதியின் பெயரை ரசியா என்றுமதம் மாற்றி திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் தற்போது 9 வயதுடைய மகனும், 6 வயதுடைய மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நவ்ஷாத்துக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்படவே, ஆட்டோ ஓட்டுவதில் வரும் பெரும் பங்கு வருமானத்தை மதுவுக்கு செலவிட்டுள்ளார். மேலும், தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம் போல குடித்துவிட்டு மனைவியுடன் கடுமையாக நவ்ஷாத் சண்டையிட்டுள்ளார்.
இந்த சண்டையில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நவ்சாத் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு இறைச்சி வெட்டும் கத்தியுடன் துரத்தியுள்ளார். பயந்துபோன ரசியா வீட்டின் கழிவறைக்குள் சென்று கதவை தாழிட்டு இருந்துள்ளார். வெளியே இருந்த நவ்ஷாத் மனைவியை கொலை செய்ய வேண்டும் என்று கதவை வெட்டியுள்ளார்.ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரசியா நவ்சாத் கீழே விழுந்துவிடவே, அவர் கையில் இருந்த கத்தியை வாங்கி காதல் கணவனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருந்த ரசியாவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர், ரசியாவே நேரடியாக காவல் நிலையத்திற்கு கத்தியுடன் சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார்.
Tags :