அதிமுக ஆட்சியில்  தலைவர்கள் மீது  போடப்பட்ட 130 அவதூறு வழக்குகள் ரத்து.

by Editor / 30-07-2021 07:32:40pm
அதிமுக ஆட்சியில்  தலைவர்கள் மீது  போடப்பட்ட 130 அவதூறு வழக்குகள் ரத்து.

 

அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் இரத்து செய்யப்படுகிறது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து அவதூறு வழக்கையும் திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கையை கைவிடமும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதன்மூலமாக அரசியல்கட்சி தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 130 வழக்குகள் அரசால் திரும்ப பெறப்பட்டு இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


அதிமுக ஆட்சியை விமர்சித்து அவதூறு பேசியதாக அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன் முலமாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், கனிமொழி, கே.என். நேரு, வைகோ உட்பட பல தலைவர்களின் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது

 

Tags :

Share via