ஆவின் பண்ணையில் பெண் உயிரிழப்பு

by Staff / 21-08-2024 11:52:37am
ஆவின் பண்ணையில் பெண் உயிரிழப்பு

ஆவின் பண்ணையில் துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதால் பெண் உயிரிழந்தார். திருவள்ளூர் காக்களூரில் உள்ள ஆவின் பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் விழுந்து சேலத்தைச் சேர்ந்த உமாராணி (30) என்ற பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via