14 நிபந்தனை ஆர்யன்கானுக்கு நீதிமன்றம் உத்தரவு

by Editor / 30-10-2021 07:08:09pm
14 நிபந்தனை ஆர்யன்கானுக்கு நீதிமன்றம் உத்தரவு

 

ஆர்யன் கானுக்கு 14 நிபந்தனைகளுடன் ஜாமீன்.. நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும்.
 
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம் 14 நிபந்தனைகளை விதித்துள்ளது.

சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்  கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்ற நேற்று முந்தினம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ஆர்யன் கானுக்கு 14 நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
 
அதன்படி ஆர்யன் கான் மும்பையை விட்டு வெளியேற தடை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்ட நண்பர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது, செய்தியாளர்களை சந்திக்க கூடாது, தேவைப்படும் போதெல்லாம் விசாரணைக்கு வர வேண்டும், உள்ளிட்ட 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் பட்சத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via