தாயுடன் தகாத உறவு.. தீர்த்துக்கட்டிய மகன்கள்

by Staff / 25-03-2024 05:14:32pm
தாயுடன் தகாத உறவு.. தீர்த்துக்கட்டிய மகன்கள்

தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உப்பள தொழிலாளி முனியசாமி. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் முனியசாமிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த கணவனை இழந்த நிர்மலா-வுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர்பு நிர்மலாவின் மகன்களான சதீஷ் மற்றும் சுதாகருக்கு தெரிய வர, முனியசாமியை சந்தித்து மிரட்டியுள்ளனர். ஆனாலும் அந்த உறவை இருவரும் கைவிடவில்லை. இந்நிலையில் சாமி நகர் பகுதியில் முனியசாமி சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த சதீஷ் மற்றும் சுதாகர் இருவரும் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனையடுத்து தகவலறிந்த போலீசார் கொலையாளிகளை தேடி வருவதுடன் விசாரணை கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via