டெல்லியில் தேசிய மாநாடு: முதல்வர் உரையாற்றுகிறார்

by Staff / 14-09-2023 12:48:35pm
டெல்லியில் தேசிய மாநாடு: முதல்வர் உரையாற்றுகிறார்

திமுக சார்பில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த ஆண்டுதொடங்கினார். இந்த கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அதையேற்று, பல்வேறு தேசிய, மாநில கட்சிகள் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளன. தமிழகத்தில் இருந்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, விசிகதலைவர் திருமாவளவன், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். ‘நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2-வது மாநாடு, வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாகப் பங்கேற்று பேசுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via