கோழிப்பண்ணையில் 4 பேர் மூச்சுத்திணறி பலி

by Staff / 19-09-2023 11:08:31am
கோழிப்பண்ணையில் 4 பேர் மூச்சுத்திணறி பலி

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் உள்ள ஒரே அறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்து கிடந்தனர். காலே சரிகி (60), லட்சுமி சரிகி (50), உஷா சரிகி (40), பூல் சரிகி (16) ஆகியோர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களது குடும்பம் கடந்த 10 நாட்களாக ஹோலைரஹள்ளியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தது. முதற்கட்ட விசாரணையில் மூச்சுத் திணறல் தான் மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via