என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

by Staff / 22-09-2023 12:38:42pm
என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

உத்திரப் பிரதேச மாநிலம், அயோத்தி ரயில் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சரயு எக்ஸ்பிரஸ் பெட்டியில் பெண் காவலரை தாக்கிய இரண்டு குற்றவாளிகளில் ஒருவர் வெள்ளிக்கிழமை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். லக்னோ சிறப்பு அதிரடிப்படை என்கவுன்ட்டரில் அனிஷ் என்பவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் துப்பாக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்கள் தலைமறைவாக இருந்தபோது, ​​இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் போலீசார் ஒருவரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via