சட்டசபையில் விசில் சத்தம் எழுப்பிய பாலகிருஷ்ணா

by Staff / 22-09-2023 12:58:10pm
சட்டசபையில் விசில் சத்தம் எழுப்பிய பாலகிருஷ்ணா

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆந்திரப் பிரதேச சட்டசபையில் 2வது நாளாக அமளி நீடிக்கிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா சட்டசபையில் விசில் சத்தம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடு, 2014இல் முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சட்டசபையில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via