பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது.

by Staff / 28-09-2023 03:06:50pm
பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது.

பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா பஞ்சாப் போலீசாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சண்டிகரில் உள்ள கைராவின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ கைரா சர்வதேச கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் அளித்ததாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து நிதி ஆதாயங்களைப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

Tags :

Share via