காருண்ய வாசலில் மிலாது நபி கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம்

by Admin / 28-09-2023 11:15:26pm
 காருண்ய வாசலில் மிலாது நபி கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம்

திண்டுக்கல் கலிக்கம்பட்டியில் காருண்ய வாசலில் மிலாது நபி கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

 

 

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டியில் காருண்ய வாசலில் மிலாது நபி கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஹஜ்ரத் அஸ்ஸையது டாக்டர் க்வாஜா முபாரக் மௌலானா ஹத்தாகி காதிரி,சிஸ்தி, ஷத்தாரி ரிஃபாயி அன்னவர்கள் தலைமை தாங்கினார்கள்.. அப்துல் லத்தீப் மற்றும் ஹாஜி சுலைமான் கலிக்கம்பட்டி பள்ளிவாசல் முத்தவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இறைமறை துவக்க வழிபாட்டினைமௌலவி ஹாபிழ் அப்துல்லா தாவூதி ஹஜ்ரத் சிறப்பாக ஆரம்பித்து வைத்தார் .இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் கலிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரின் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. மும்மதத்தினரும் ஒன்று கூடி விழாவினை சிறப்பித்து அன்னதானமும் நடைபெற்றது  உணவு அனைவருக்கும்  வழங்கப்பட்டது .அன்னதான விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 காருண்ய வாசலில் மிலாது நபி கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம்
 

Tags :

Share via