மின்சாரம் தாக்கி 5 பசுக்கள் பலி.

by Staff / 03-10-2023 02:47:25pm
மின்சாரம் தாக்கி 5 பசுக்கள் பலி.

பாளையூர் கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் அறுந்து கிடந்து மின் கம்பியின் மின்சாரம் தாக்கி 5 பசுமாடுகள் உயிரிழந்தன. செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன் 35; விநாயகம் 38; வெங்கடேஷ் 33; மாரி 31; ஆகிய நான்கு பேரும் பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. வழக்கம் போல பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள பாளையூர் கிராம வயல்வெளி பகுதிக்கு அழைத்து சென்ற போது, பாளையூர் கிராமத்தை சேர்ந்த மரியன் அந்தோணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மின் மோட்டார்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யும் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. மேச்சலுக்கு சென்ற மாடுகளின் கால்கள் மின்கம்பிகள் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து, ஐந்து பசு மாடுகள் உயிரிழந்தன.

 

Tags :

Share via