அதிமுகவை கடுமையாக சாடிய அமைச்சர்..தங்கம் தென்னரசு
சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்
, 2011 டிசம்பரில் 'தானே' புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள். 2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த 'ஒக்கி' புயலின் போது, ஆர். கே. நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர்.2018ல் 'கஜா' புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார்.ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம் என்றார்.
Tags :