பொது இடத்தில் ரகளை செய்த 5 பேர் கைது
புதுவை ராஜீவ்காந்தி குழந்தைகள் மகப்பேறு மருத்துவ மனை அருகே ஒரு வாலிபர் மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த டேனியல் ஜாய்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.இதுபோல் புதுவை பஸ் நிலையம் அருகில் குடித்து விட்டு ரகளை செய்த பெரியார் நகரை சேர்ந்த பார்த்தீபன் (29), பண்ருட்டியை சேர்ந்த அஜய்(28), முருகன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு அஜய்(22) ஆகிய 3 பேரை உருளையன்பேட்டை போலீசாரும், கனகசெட்டிகுளம் பகுதியில் குடித்து விட்டு ரகளை செய்த மரக்காணம், கூனிமேடு குப்பம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரை காலாப்பட்டு போலீசாரும் கைது செய்தனர்.
Tags :