டிடிஎப் வாசனுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

by Staff / 03-10-2023 04:55:02pm
டிடிஎப் வாசனுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கேட்டு மூன்றாவது முறையாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுவை வாபஸ் பெற்றிருந்தார். இந்த நிலையில், அவருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. கடந்த மாதம் பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் மீது, பிறரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via