பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

by Staff / 06-10-2023 04:07:44pm
பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

வீட்டில் செல்போன் பார்க்காதே என பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் வெள்ளோடு அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஸ்டாலின் மாரடோனா(14) என்ற பள்ளி மாணவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மாணவன் பள்ளி விட்டு வந்த உடனே செல்போனவே பார்த்துக் கொண்டு இருப்பாராம். இதிலிருந்து மாணவன் விடுபட முடியாமல் தவித்துள்ளார். பெற்றோர் கண்டித்தால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக தெரிகிறது. ஆனால் பெற்றோர் தீராத நோய் இருந்ததாகவும் கூறுகின்றனர். எது உண்மை என்பதை தொடர்ந்து விசாரித்து வருகிறோம், என்றனர்.

 

Tags :

Share via

More stories