வெடி விபத்து - எடப்பாடி இரங்கல்

by Staff / 08-10-2023 12:22:27pm
வெடி விபத்து - எடப்பாடி இரங்கல்

ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளபட்டாசு கடையில் து. இந்த நிலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பலி எண்ணிக்கை13ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அத்திப்பள்ளி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 10 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via