எலி பேஸ்ட் சாப்பிட இளைஞர் பலி.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த ராப்பூசலை சேர்ந்தவர் சுப்பையா (42). இவரது மகன் தாமரைச்செல்வன் (20). இவர், கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், 'கடந்த அக். 5ம் தேதி ஒடுக்கூர் குளம் அருகே எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் தாமரைச்செல்வனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று தாமரைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :