கிணற்றில் குதித்து பெண் தற்கொலை!

by Staff / 13-10-2023 01:35:04pm
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை!

கோவில்பட்டி அருகிளுள்ள இனாம் மணியாச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் சோலைச்சாமி (வயது 53). இவரது மனைவி கனகலட்சுமி ( 47). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், காளியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், செந்தில், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via