தென்காசியில்  இரண்டு ஆம்னி பேரூந்துக்கள்,தனியார் கல்லூரி பேருந்து உளியிட்ட 3 வாகனங்கள் பறிமுதல்.  

by Editor / 16-10-2023 07:48:57pm
 தென்காசியில்  இரண்டு ஆம்னி பேரூந்துக்கள்,தனியார் கல்லூரி பேருந்து உளியிட்ட 3 வாகனங்கள் பறிமுதல்.  

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையநல்லூர், செங்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சென்னை, பெங்களூர்,கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் எந்த ஆம்னி பேருந்துகளும் முறையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் மணிபாரதி, மற்றும் ராஜன்,உள்ளிட்டோர் தென்காசி குத்துக்கல்வலசை சாலையில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது நாகலாந்து மாநிலத்தின் உடைய பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை சோதனை செய்த பொழுது பயணிகளை ஏற்றி இறக்கம் செய்ய தமிழகத்தின் பெர்மிட் உள்ளிட்ட எந்த  முறையான அனுமதியும் இல்லாமல் இரண்டு ஆம்னி பேருந்துகள் இயக்கம் நடந்து வந்தது கண்டறியப்பட்டது.சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்வதற்குமட்டுமே அனுமதிபெறப்பட்டு அதனை ஆம்னி பேருந்து இயக்கத்திற்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு ஆம்னி பேருந்துகளையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினர்.மேலும் தகுதிச்சான்று இல்லாததால் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியின் வாகனத்தையும்  பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :  தென்காசியில்  இரண்டு ஆம்னி பேரூந்துக்கள்,தனியார் கல்லூரி பேருந்து உளியிட்ட 3 வாகனங்கள் பறிமுதல்.  

Share via

More stories