பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

by Editor / 17-10-2023 09:42:45pm
பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

சிவகாசி அருகே ரெங்கபாளையம் பட்டாசுக் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags : முதல்வர்

Share via