உடல் உறுப்புதானம் செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகிரி வட்டம், இராயகிரி அருகிலுள்ள உள்ளார் பகுதியை சேர்ந்த சண்முகத்துரை வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் (16.10.2023) நேற்று சிகிச்சைக்காக திருநெல்வேலி, மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின்போது மூளைச்சாவு அடைந்து விட்டதன் காரணத்தினால் அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினார் உறுப்பு தானம் செய்துள்ளனர். மேற்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரை என்பவரின் உடலுக்கு இன்று மாலை இறந்தவரின் சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், கோட்டாட்சித் தலைவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tags : உடல் உறுப்புதானம் செய்தவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை