ஆம்னி பேருந்து ஏறி இறங்கியதில் மாணவர் பலி

by Staff / 20-10-2023 04:33:36pm
ஆம்னி பேருந்து ஏறி இறங்கியதில் மாணவர் பலி

கோயம்பேடு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் மாணவர் பலியானார். சென்னை: நெற்குன்றம் திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் கல்லுாரி மாணவரான இவர், நேற்று முன்தினம் பைக்கில், கோயம்பேடு சந்தை சாலை வழியாக சென்றார். அப்போது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில், முத்துகுமார் மற்றும் ராஜ்குமார் கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து ராஜ்குமார் மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார். முத்துகுமார் பலத்த காயமடைந்தார். கோயம்பேடு போக்குவரத்து போலீசார், ஆம்னி பேருந்து ஓட்டுனரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரபீக் என்பவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via