அமெரிக்காவில் 700-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

by Editor / 31-07-2022 03:05:06pm
அமெரிக்காவில் 700-க்கும் மேற்பட்ட  துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி வாங்கும் நிகழ்ச்சியில்  700 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் அதற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்டனர். ஹீஸ்டன் நகரில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு கார்களில் காத்திருந்த மக்களிடமிருந்து துப்பாக்கிகளை பெற்ற போலீசார் செயல்படாத துப்பாக்கிகளுக்கு 50 டாலர் வழங்கினர் மேலும் துப்பாக்கிகளின் வகைகளைப் பொறுத்தும் 100 முதல் 200 டாலர் வரை மதிப்புள்ள விசா பரிசுப்பொருள் அட்டைகளையும் வழங்கினர்.

 

Tags :

Share via