வலுப்பெற்ற வடகிழக்கு பருவமழை 8மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்ற புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், கடல் பகுதிகளில் குளிக்கச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags : வலுப்பெற்ற வடகிழக்கு பருவமழை 8மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.