மசாஜ் செய்வதாக கூறி பல லட்சம் மோசடி

by Staff / 23-10-2023 12:01:17pm
மசாஜ் செய்வதாக கூறி பல லட்சம் மோசடி

கோவையில் கேரள அழகிகளை வைத்து மசாஜ் செய்வதாக வந்த வாட்ஸ்-அப் தகவலை நம்பி, கோவை பீளமேடு புதூர் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் (43) என்பவர் பல்வேறு தவணையாக ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 250-ஐ அனுப்பியுள்ளார்.பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை பேராசிரியரிடம் பணம் பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via