13 தமிழர்கள் உள்ளிட்ட 139 பேர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெறுகின்றனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றுள்ளனர். அந்த வகையில், நல்லி குப்புசாமி செட்டி, நடிகர் எஸ் அஜித் குமார், ஷோபனா சந்திரகுமார், குருவாயூர் துரை, கே. தாமோதரன், தினமலர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம் டி ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர் அஷ்வின், ஆர் ஜி சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோர் இந்த விருதுகளை பெறுகின்றனர்.மேலும் இந்தியா முழுமையிலும் 139 பேர் இலக்கியம்,மருத்துவம்,கல்வி,அறிவியல்,சமூக சேவை,விளையாட்டு,வணிகம்,தொழிற்சாலை,விவசாயம், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெறுகின்றனர்.
Tags : 13 தமிழர்கள் உள்ளிட்ட 139 பேர் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை பெறுகின்றனர்.