முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

by Editor / 30-10-2023 09:51:37am
 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

மருதுபாண்டியர்களின் 222 நினைவு நாளையோட்டி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வெண்கல சிலைக்கு  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இதனைத் தொடர்ந்து தேவர் ஜெயந்தியையொட்டி  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்ற அவர் அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி.உதயக்குமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

Share via