கத்தாரில் 8 இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை - ஜெய்சங்கர்

by Staff / 30-10-2023 01:01:33pm
கத்தாரில் 8 இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை - ஜெய்சங்கர்

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், 8 இந்தியர்களின் குடும்பங்களிடம் இந்தியா தொடர்பில் உள்ளது. கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களுடன் நேரில் பேசினேன் என தெரிவித்துள்ளார். மேலும், உளவு குற்றச்சாட்டில் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via