கொரோனா போலீசான்றிதழ்;தென்காசி வந்த 5 பேர் கைது

by Editor / 28-07-2021 08:44:14pm
கொரோனா போலீசான்றிதழ்;தென்காசி வந்த 5 பேர் கைது

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியரை சோதனைச் சாவடியில் சுகாதார ஆய்வாளரான சரவண குமார் என்பவர் பணியில் இருந்தபோது கேரளாவில் இருந்து தமிழகம் வந்த காரை நிறுத்தி அவர்களின் கொரோனா பரிசோதனை சான்றிதழை சோதனை செய்ததில் அது போலி என தெரியவந்தது.

 இதுகுறித்து  புளியரை மருத்துவ அலுவலர் மோதி  புளியரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர். பாலமுருகன்  விசாரணை செய்ததில் புளியரை பகவதிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணமகேஸ் (37) என்பவர் போலி கொரோனா சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலி சான்றிதழ்கள் மூலம் பயணம் செய்த கோவையைச் சேர்ந்த இசக்கிமுத்து (29),ரமேஷ்(25),தெற்கு  என்பவரின் மகன் சந்தோஷ் (24), மற்றும் இவர்களுக்கு போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்த பகவதி புரத்தைச் சேர்ந்த சரவணமகேஸ் (37) ஆகியோர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தார்.

 

Tags :

Share via